சூரிய ஒளி அதிகம் படாத கை இடுக்குகள் இடுப்பு பகுதிகளில் சிலருக்கு பூஞ்சை தொற்றுகள் வரும். இதற்கு ஆங்கில மருந்து பயன்படுத்தும் பொழுது சரியானது போல் தோன்றும். ஆனால் திரும்பி வரும். இதற்கு சீமையகத்தி சிறந்த தீர்வாக அமைகிறது. சித்த மருத்துவத்தில் இந்த பூவை கொண்டு ஆயின்மெண்ட் தயாரிக்கப்படுகிறது. அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்படுபவர்கள் சரியான மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் இந்த ஆயின்மெண்ட் பயன்படுத்தினால் பூஞ்சை தொற்று முற்றிலும் சரியாகிவிடும்.