சேப்பாக்கம் பகுதியில் கோடை மழை வெளுத்து வாங்கியது. கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கோடை காலத்தின் வெப்பம் அதிகம் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று கோடை மழை காரணமாக தலைநகர் சென்னையில் உள்ள பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் குளுகுளு சூழ்நிலை உண்டாகி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.