தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையின் போது மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.