சதுரகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

56பார்த்தது
சதுரகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரை: சாப்டூர் அருகே சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவில் ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை எஸ்பி தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 துணை கண்காணிப்பாளர்கள், 30 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி