வைக்கோல் லாரி எரிந்து நாசம் - வீடியோ

3459பார்த்தது
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோல் நாயக்கன்பட்டியை சேர்ந்த ஓட்டுனர் கண்ணன் (45). லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்கு எடுத்துச் சென்றார். அந்த லாரி கொளத்தூர் அருகே வந்தபோது மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைக்கோல் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தன. விபத்தில் காயம் அடைந்த ஓட்டுனர் கண்ணன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :