சென்னை தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பெண் ஒருவர் கேளம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பதாகவும், அதனை வாங்க ஆண் ஒருவர் வரவிருப்பதாக தகவல் தெரிவித்தார். இதனை நம்பி அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்த ஆண் மற்றும் பெண்ணை பிடித்தனர். விசாரணையில், போலீசுக்கு போன் செய்தது அந்த ஆணின் மனைவி என்றும், கணவனின் கள்ளத்தொடர்பு சகவாசத்தை பிடிக்க இவ்வாறு செய்ததாக அப்பெண் கூறியுள்ளார்.