இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக சாதாரண குடிமக்கள் பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் சில சாமானியர்களை சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதுங்கியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்றுள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகளின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு இடையே நடைபெற்று வரும் போரில் கடந்த 4 நாட்களில் 1500 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.