திராவிட கழக தலைவர் கி. வீரமணி நேற்று (ஜூன் 09) தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்திற்கு முயற்சித்து தோற்றோர் முருகன் மாநாடு நடத்துகின்றனர். முருகன் மாநாடு நடத்துவது பச்சையான அரசியல். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உள்துறை அமைச்சரே மதுரைக்கு வந்து கலவரத்தை தூண்டி விடுவது போல பேசுவது நியாயமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.