இந்திய ராணுவத்தின் துணிச்சலையும், தியாகங்களையும் போற்றும் வகையில், சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒற்றுமை பேரணி நடத்தி வருகிறார். அவருக்கு ஆளுநர் ரவி வாழ்த்து கூறியுள்ளார். மேலும், “ பாகிஸ்தானிய ராணுவத்துக்கு எதிராக போரிட்டு, நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப்படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரமாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்வருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.