சென்னை மதுரவாயல் - தாம்பரம் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து மேம்பாலத்தில் இருந்து கவிழ்ததில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், போலீஸார் தேடி வருகின்றனர்.