தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் அவர் அளித்த பேட்டியில், "நீதிமன்ற உத்தரவின்படியே தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே கூட கூறியுள்ளோம். கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை" என தெரிவித்தார்.