தமிழ்நாட்டில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அவர்களிடம் அறிவுறுத்த அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. செல்போன் பயன்படுத்தியபடி பேருந்து இயக்கும் ஓட்டுநர்களின் வீடியோக்கள் வெளியாவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.