அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு இன்று (பிப்., 06) குரல் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. குரல் பரிசோதனை முடிந்த பிறகு அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
நீதிமன்ற அனுமதி பெற்ற பின் நாளை அல்லது நாளை மறுநாள் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் ஞானசேகரனுடன் மற்றொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.