ஹரியானா: 17 வயது சிறுமிக்கும் 21 வயது இளைஞருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமானது அம்பலமாகியுள்ளது. சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் பிரிவு 6 மற்றும் குழந்தை திருமண தடைச் சட்ட பிரிவு 10 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.