எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

56பார்த்தது
எரிவாயு டேங்கர் லாரி விபத்து.. பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு
ராஜஸ்தான்: ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி எரிவாயு டேங்கர் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் ஏற்கனவே 19 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.28) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், தற்போது ராஜஸ்தானில் எரிவாயு டேங்கர் லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி