கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - விசாரணைக் குழு அமைப்பு!

2483பார்த்தது
கேங்ஸ்டர் சுட்டுக்கொலை - விசாரணைக் குழு அமைப்பு!
உத்தரபிரதேசத்தில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் காவல்துறையினர் முன்பே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரின் மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது அத்திக் அகமது சுட்டுக் கொலைப்பட்டுள்ளார். இந்நிலையில், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.