“உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உயர்த்தி வழங்கப்படும்”

71பார்த்தது
“உழவர் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உயர்த்தி வழங்கப்படும்”
தமிழ்நாடு சட்டப்பேரவையில், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், “முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்துள்ளார். மேலும், “நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ. 2,500ல் இருந்து ரூ. 10,000 உயர்த்தப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி