"இனிமே நம்ம போற பாதை சிங்க பாதை" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் கலைஞர் ஒருங்கிணைத்த பேருந்து நிலையத்தை திறந்துவைத்த பின் பேசிய அவர், திருச்சிக்கும் திராவிட தலை மகன்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும் அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது திருச்சி. 4 ஆண்டுகளில் சரிவில் இருந்து நம்பர் ஒன் மாநிலமாக சாதனை படைத்தோம். இதை விட பெரிய சாதனைகளை படைப்போம் என தெரிவித்தார்.