சென்னையில் இந்த மாத 9 , 10ம் தேதிகளில் பார்முலா 4 கார் பந்தயம் பிரமாண்டமாக நடைபெற இருந்தது. இந்த பந்தயம் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், சென்னையில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், கார் பந்தயம் டிச.14ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தமிழக அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது.
இந்நிலையில் திடிரென பார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.