கண்களின் கருவிழியில் வெள்ளை படலம் தோன்றுவதை கண்புரை (cataract) என்கிறோம். வயதானவர்களுக்கே இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படும். இதை தடுக்க கண்களின் ஆரோக்கியத்தை காக்க வேண்டும். பசலை கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட கண்புரையை தடுக்கலாம். ஏலக்காய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை உணவில் சேர்க்க வேண்டும். பப்பாளி மற்றும் பேரீச்சம் பழம் கண்பார்வைக்கு உதவுவதோடு கண்புரையை எதிர்த்து போராடும்.