மும்பையில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகள் மற்றும் ரயில் நிலையங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில், மும்பையில் உள்ள ரயில் நிலையம் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரயில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியது. அந்த நீரில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. இதனை ரயில் பயணிகள் மொபைலில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தில் ஒரு மீன் குளம் என தலைப்பிட்டு, பகிர்ந்து வருகின்றனர்.