விருதுநகர் அருகே சின்னவாடி கிராமத்தில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, வெடி விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.