சென்னை உணவகத்தில் தீ விபத்து- 3 பேர் படுகாயம்

55பார்த்தது
சென்னை உணவகத்தில் தீ விபத்து- 3 பேர் படுகாயம்
சென்னை அண்ணாநகரில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட்ஸில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து 3 பணியாளர்கள் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று காலை அந்த உணவகத்தில் ஒரு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதில் சக்தி, ராகுல், ஞானபாலு ஆகியோர் தீவிபத்தில் காயம் அடைந்தனர். காலை நேரத்தில் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லாததால் பெரும் அளவிலான விபத்து தடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி