சென்னை மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் சினிமா பின்னணி பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னணி பாடகர் வேல்முருகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் காவல்துறையினர் கைது செய்து பின் ஜாமீனில் விடுவித்தனர். வேல்முருகன் மதுபோதையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் அத்துமீறயதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.