மழையால் நாசமான நெற்பயிர்கள்.. இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

62பார்த்தது
திருவாரூர் மாவட்டத்தில் இந்தாண்டு 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நாசமாகின. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி