கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் விவசாய சாகுபடிக்கான முதல் தர சூழல் நிலவுவதால், விவசாயிகள் பயிர் சாகுபடியில் மும்முரம் காட்டி வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால், ஏற்கனவே குறைந்த அளவே தண்ணீர் இருந்த ஏரிகளில், தொடர் மழையின் காரணமாக தற்போது நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. நெல், கேழ்வரகு, தக்காளி, காய்கறிகள் மற்றும் பூக்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.