24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு

70பார்த்தது
24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு
24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை வரும் ஜூன் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி