ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இன்று டிச.17 வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தொடர் கனமழை காரணமாக தேர்வர்களின் நலன் கருதி வருகிற 20-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.