பரபரப்பு.. கபடி போட்டியில் சிறுவன் பலி!

2663பார்த்தது
பரபரப்பு.. கபடி போட்டியில் சிறுவன் பலி!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடிய 16 வயது ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த அரசு ஐடிஐ மாணவரான பிரதாப் கபடிப்போட்டியில் விளையாடிய போது எதிரணியினர் மடக்கி பிடித்த போது தலைகுப்புற விழுந்ததில் அவருடைய தலையின் பின்புறம் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.