ஈரோடு: மாநில அளவிலான எறிபந்து போட்டி

84பார்த்தது
ஈரோடு: மாநில அளவிலான எறிபந்து போட்டி
ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் த்ரோபால் அகாடமி மற்றும் இந்துஸ்தான் கல்லூரி இணைந்து 3ம் ஆண்டு மாநில அளவிலான எரிபந்து விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக போட்டியினை சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பங்கேற்று தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். நிகழ்ச்சியில், கல்லூரியின் தாளாளர் ராமன், திமுக மாவட்ட பிரதிநிதி ஈங்கூர் கார்த்தி, பெருந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவர் சரஸ்வதி துரைராஜ், நிர்வாகிகள் நாகராஜ், வெங்கடாசலம், ரமேஷ், பிரதீப், கந்தசாமி, சண்முகம், கிருஷ்ணசாமி, லோகநாதன், ராயல் குமார் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி