ஈரோட்டில் குட்கா பொருட்கள் பறிமுதல்

85பார்த்தது
ஈரோட்டில் குட்கா பொருட்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சூரம்பட்டி பகுதியில் உள்ள லிங்கபாண்டி (61) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில், ஈரோடு சூரம்பட்டி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லிங்கபாண்டியை கைது செய்தனர்.
இதேபோன்று, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் துரைசாமி (54) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ஈரோடு வடக்கு போலீசார், அவரை கைது செய்தனர்.
.

தொடர்புடைய செய்தி