ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ம் தேதி தொடங்குவதை அடுத்து, முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ம் தேதி துவங்குகிறது. 31ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது.
9ம் தேதி மாலை 6: 30 மணி முதல் 9: 00 மணி வரை கஸ்துாரி அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் அருள் பாலிப்பார். 10 அதிகாலை 3: 00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சியும், 5: 00 மணிக்கு பரமபத வாசல் திறப்பும் நடக்கிறது.
11ம் தேதி முதல் 20ம் தேதி வரை, இராப்பத்து உற்சவம் நடைபெறும். பகல், இராப்பத்து உற்சவ நாட்களில் திவ்ய பிரபந்த பாராயணம் பாடப்படும். 20ம் தேதி, நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும். முன்னேற்பாடு பணிகளை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.