ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பு

85பார்த்தது
ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் சில்லறை வியாபாரம் விறுவிறுப்பு
ஈரோடு ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றதாகும். திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் துணிகளை ஒட்டுமொத்தமாக வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜவுளி வாரச்சந்தை கூடியது. 

பல்வேறு இடங்களிலிருந்து வந்த சிறு வியாபாரிகள் ஜவுளிக்கடைகளை அமைத்திருந்தனர். கர்நாடகா, கேரளா போன்ற பகுதிகளிலிருந்து வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவிலிருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் மொத்த வியாபாரம் மந்தமாக நடந்தது. ஆனால் அதே நேரம் ரம்ஜான் பண்டிகை, தொடர் முகூர்த்தம், தொடர்ந்து கோயில்களின் திருவிழா வருவதால் இன்று சில்லறை விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

தொடர்புடைய செய்தி