மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுகோள்

55பார்த்தது
மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுகோள்
மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டுகோள்

பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நூல் மின் பாதையில் சிக்கிக்கொள்வதால் தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடு வதை தவிர்க்க வேண்டும் என மின்வா ரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரோடுமின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மு. க லைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மின் பகிர்மான வட்டத் துக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம் உப

கோட்டம், வீரப்பன்சத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட திருநகர் காலனி, கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகர், ராமமூர்த்தி நகர், சித்தன் நகர், கமலா நகர் ஆகிய பகுதிகளுக்கு திருந கர் காலனி மின்பாதை வழியாக மின் னூட்டம் அளிக்கப்படுகிறது.

இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்க ளில் சிலர் மாலை நேரங்களில் பட்டம் விடுவதால் பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நூல் மின் பாதையில் சிக்கி கொண்டு தொடர்ச்சியாக மின் தடை

ஏற்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் பொதுமக்கள் விட்ட பட்டம் சிக்கியதால் 19, 21, 22, 25 ஆகிய தேதிக ளில் தொடர் மின் தடை ஏற்பட்டுள் ளது. மின்தடை ஏற்படுவதால், வடீசி பூங்காவில் உள்ள நீரேற்று நிலையத் துக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, பட்டம் விடுவதால் ஏற்படும் மின்தடையை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி