கொடுமுடி: காவேரி ஆற்றில் ஆண், பெண் சடலங்கள்

5347பார்த்தது
கொடுமுடி: காவேரி ஆற்றில் ஆண், பெண் சடலங்கள்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் மரவாபாளையம் சுடுகாடு அருகே காவிரி ஆற்றின் கரை ஓரம் சுமார் 45 வயது பெண் பிணம் மிதந்து கிடந்தது. அதேபோல் சுமார் 32 வயது ஆண் பிணம் காவிரி ஆற்றில் நடுவே சிக்கிக் கொண்டு இருந்தது. இதை குறித்து தகவல் அறிந்த கொடுமுடி காவல் நிலையம் போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அந்த ஆண் நாமக்கல் மாவட்டத்தில் சேர்ந்த ஜெகநாதன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி