ஈரோடு ஊரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை, காஞ்சிக்கோயில், சென்னிமலை, அறச்சலூர், வெள்ளோடு, கொடுமுடி, சிவகிரி மற்றும் மலையம்பாளையம் காவல் நிலையங்களில் உள்ள குக்கிராமங்களில் தோட்டங்கள், தனியாக உள்ள வீடுகளில் தனியாக வசித்து வரும் முதியோர்களில் இதுவரை 2,416 நபர்களின் பெயர் மற்றும் முழு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தாத வீடு மற்றும் தோட்டத்து வீட்டின் உரிமையாளர்களிடம் கேமரா பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டம் முழுவதும் 4,650 இடங்களில் 13,214 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.