ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச. 27ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம், கோபி அருகே உள்ள அளுக்குளி மற்றும் பவானிசாகர் அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 27ம் தேதி) வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர் நாச்சிமுத்து, கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மொடக்குறிச்சி கணபதிபாளையம் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை): - மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்: - ஆயிக்கவுண்டன்பாளையம், கணபதிபாளையம், சானார்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என். ஜி. புதூர், காங்கேயம்புரம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திகாடுவலசு, கொமரம்பாளையம், ராக்கியாபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், முனியப்பம்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தரண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆர். கே. ஜி. புதூர், கிளாம்பாடி மற்றும் செட்டிகுட்டைவலசு.