நாம் தமிழர் கட்சியினரை குண்டுகட்டாக வேனில் ஏற்றி காவல்துறை

54பார்த்தது
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு கொடிசியா மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடக்க இருக்கும் மே 18 இன எழுச்சி பொதுக் கூட்ட பதாகை வைக்கப்பட்டது,

இந்த பதாகை அனுமதி இன்றி வைக்கப்பட்டதாக நம்பியூர் காவல் துறையினர் அதனை மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள தாண்டவ மூர்த்தியிடம் தெரிவித்துள்ளனர்,
அந்த பதாகையை அகற்ற முடியாது எனவும் மற்ற கட்சியை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் பதாகை வைக்க அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று காவல் துறையினரும் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

தொடர்ந்து காவல்துறையினர் அந்த பதாகைகளை அகற்ற முற்பட்டபோது நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் காரின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் பதாகையை அகற்ற மறுப்பு தெரிவித்து துறையினரிடம் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,

அதனைத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் தாண்டவ மூர்த்தியை குண்டுகட்டாக காவல் நிலைய வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் பின்னர் நம்பியூர் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி