கவுந்தப்பாடி பழனி கோவிலுக்கு கரும்பு சக்கரை கொள்முதல்

76பார்த்தது
கவுந்தப்பாடி பழனி கோவிலுக்கு கரும்பு சக்கரை கொள்முதல்
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனிக்கு 31.12.2024 செவ்வாய்க்கிழமை அன்று நண்பகல் 1.00 மணிக்கு கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கரும்புச் சர்க்கரையை 31.12.2024 முற்பகல் 11.00 மணிக்குள் கவுந்தப்பாடி விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

மேலும் 30.12.2024 திங்கட்கிழமை அன்று கரும்புச்சர்க்கரை மூட்டைகள் இறக்கப்படும், அலுவலகம் வழக்கம்போல் செயல்படும். (குறிப்பு: மூட்டைகள் சணல் நாரால் தைத்து, கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி, கலப்படம் ஏதும் இல்லாமல் சுத்தமான மற்றும் தரமான கரும்புச்சர்க்கரையை மட்டும் எடுத்து வருமாறு ஈரோடு விற்பனைக்குழுவின் செயலாளர், மேலும் விவரங்களுக்கு 9944523556 விற்பனைக் கூட கண்காணிப்பாளர், கவுந்தப்பாடி. கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி