கோடை காலம் ஆரம்பித்து வெப்ப தாக்கம் அதிகமாக இருப்பதால் கடும் வெயிலிலும் போக்குவரத்தை சீர் செய்யும் கோபி உட்கோட்ட காவல்துறை, போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜவகர் IPS, அவர்களின் உத்தரவுப்படி, கோபி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு. சீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் ஏற்பாட்டில் கோபி காவல்துறையினருக்கு காகித கூழ் தொப்பி (solar cap) வழங்கியும், இன்று முதல் இலவச நீர் மோர், காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் வழங்க மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் அவர்கள் முன்வந்து நீர் மோர் இலவசமாக வழங்கியுள்ளார்.
மேற்படி இலவச நீர் மோர் மற்றும் காகிதக்கூழ் தொப்பி (solar cap) தலைக்கவசம் வழங்கினார். போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. தண்டபாணி உடன் இருந்தார். போக்குவரத்து போலிசார் அனைவருக்கும் DSP திரு. சீனிவாசன் அவர்கள் தொப்பி மற்றும் நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.