கோபி அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

58பார்த்தது
கோபி அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
கோபி அருகே உள்ள நாதிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 62). பெயிண்டர் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி