கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் ரூ. 20.39 லட்சம் காணிக்கை

586பார்த்தது
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் ரூ. 20.39 லட்சம் காணிக்கை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில், 20 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கப்பணமாக, 20.39 லட்சம் ரூபாய், 13 கிராம் பலமாற்று தங்கம், 164 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக, கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி