ஈரோடு கிழக்குத் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று (பிப்ரவரி 05) நடைப்பெற்று முடிந்தது. இந்நிலையில், கள்ள ஓட்டு போட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர். வீரப்பன்சத்திரம் வாக்குச் சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற கரூரைச் சேர்ந்த நாதகவினர் சசிகுமார், கவாஸ்கர் ஆகியோரை கைது செய்தனர். வெளியூரில் இருந்து நாம் தமிழர் கட்சியினரை அழைத்து வந்து கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.