ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சத்தியமங்கலம் கற்பூரவள்ளிக்காடு பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக, கோபி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதேப்பகுதியைச் சேர்ந்த சின்னதம்பியை (26) கைது செய்து, 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.