ஏடிஎம்-மில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

6066பார்த்தது
ஈரோடு மாநகருக்குட்பட வீரப்பன் சத்திரம் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கும், செலுவதற்கும் ஏதுவாக, வங்கி முன்பு ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடிக்க தொடங்கியதால், பயந்து போன மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றதால், ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பப்பட்டிருந்து சுமார் 8 லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

இதனையடுத்து, மறுநாள் காலை வழக்கம்போல் பணிக்கு வந்த வங்கி ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக அசோகபுரம் பகுதியை சேர்ந்த, தறிப்பட்டறை தொழிலாளியான, வாலிபர் ராகுல் என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி