ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையக கிடங்குக்கு மாற்றம் செய்யப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வாக பொறுப்பு வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் டிசம்பர் 14-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்அடிப்படையில், மாநகராட்சி அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந் திரங்கள், வி. வி. பேட் உள்ளிட் டவற்றை மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.மணீஷ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.