ஈரோடு: காய்கறி, நூலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

73பார்த்தது
ஈரோடு: காய்கறி, நூலக கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க  அறிவுறுத்தல்
ஈரோடு மாநகராட்சியின் சார்பில் சோலாரில் புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று, சம்பத் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய நூலக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த காய்கறி, நூலக கட்டுமான பணிகளை, நகராட்சி நிர்வாக அலுவலக தலைமை பொறியாளர் திருமாவளவன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது, உதவி ஆணையர் ஆனந்த், செயற்பொறியாளர் பிச்சமுத்து உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி