நீட் தேர்வில் ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி மாணவிகள் நேத்ரா, 676, மதுமிதா, 667 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். இவர்களை பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் சந்திரசேகர், பொருளாளர் அருண், பள்ளி ஆலோசகர் பாலசுப்பிரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, துணை முதல்வர் மஞ்சுளா, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் பாராட்டினர்.