ஈரோடு இதயம் நற்பணி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
ஈரோடு சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் பில்டிங் வளாகத்தில் ஈரோடு இதயம் நற்பணி இயக்கத்தின் தலைவரும், மாவட்ட முன்னாள் கமலஹாசன் மன்ற பொறுப்பாளருமான எஸ். வி. மகாதேவனின் 45 வருட நற்பணிகளின் புகைபடங்கள் அடங்கிய நற்பணியும் நண்பர்களும் என்ற தலைப்பிலான புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.
இவ்விழாவிற்கு கண் மருத்துவர் டாக்டர் சுகுமார் தலைமை தாங்கினார். அரசன் கண் மருத்துவமனை செல்வலதா பன்னீர்செல்வம், பிரியா மோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா பங்கேற்று, புத்தகத்தை வெளியிட மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, இதயம் நற்பணி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களுக்கு ரூ. 45 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.