ஈரோடு மாவட்டம் கோபி உட்கோட்டம் நம்பியூர் பகுதியில் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சொந்தமாக சலூன் கடையை வைத்துள்ளார். இவர் நேற்று வீட்டிற்கு உள்ளே இரவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் ஊர் மக்கள் நம்பியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் தகவல் அறிந்த நம்பியூர் போலீசார் லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதைப்பற்றி நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.